அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் "நன்றி நவிலும் நாள் விழா"

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் உள்ள திருச்சிற்றம்பலக் கலையரங்கில் "நன்றி நவிலும் நாள் விழா" நடைபெற்றது. இதில், போசிரியல் பார்வதி வரவேற்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலை உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்கள் தங்களது படிப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொணர காரணமாக இருக்கிற ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்' என கூறினார்.

இதையடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எஸ்.ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இப்பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்ததற்கு தான் பெருமை அடைகிறேன். அன்பும் மரியாதையுடன் கலந்த ஒரு கல்வியை கற்பித்து கொண்டிருக்கிற ஒரு கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் திகழ்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு கல்விகற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் அதன் பயன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். 

பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் வளர வேண்டும். தங்களால் முடிந்த  வரை மக்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இளங்களை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 250 மாணவியர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...